
கிழக்கு மாகாணத்தில் 1990 ஆகஸ்ட் மாதத்தில் நடந்த துயரமான சம்பவங்கள், முப்பந்தைந்து ஆண்டுகள் கடந்தும் மக்களின் மனதில் ஆறாத வடுவாகவே உள்ளது. அந்த கொடூரமான காலகட்டத்தில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் படுகொலைகளுக்கு இன்றும் நீதிகிட்டவில்லை. குறிப்பாக, 1990 ஜூலையில் நடந்த குருக்கள்மடம் படுகொலை, ஆகஸ்ட் 3 அன்று நடந்த காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை, ஆகஸ்ட் 12 இல் இடம்பெற்ற ஏறாவூர் படுகொலை உள்ளிட்ட பல படுகொலைச் சம்பவங்கள், கடத்தல்கள், பொருளாதார சூறையாடல்கள் என்பன பாதிக்கப்பட்ட மக்களின் இதயத்தில் ஆழமான காயங்களை ஏற்படுத்தியுள்ளன.