வேன் மீது ரயில் மோதி விபத்து– பெண் சாரதி காயம்!

அளுத்கம பகுதியில் உள்ள சீலானந்த வீதியில் அமைந்த ரயில் கடவையில் இன்று  காலை சிறிய ரக வேன் மற்றும் ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.  

மருதானையிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்ற ரயிலுடன் வேன் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வேனை செலுத்திய பெண் ஒருவர் இந்த விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

இவ்விபத்து தொடர்பில் அளுத்கம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply