வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கலந்துரையாடல்!

வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கலந்துரையாடல்,  யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்க அலுவலகத்தில்  இன்று மாலை நடைபெற்றது.

தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக வெளிமாவட்டங்களில் பணிபுரியும் அலுவலகர்களின் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இதன்போது ஆராயப்பட்டன. 

யாழ்ப்பாணத்தை சொந்த இடமாக கொண்டு ஐந்து வருடங்களுக்கு மேலாக வெளிமாவட்டங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் இடமாற்றம் இல்லாமல் பல்வேறு சிரமத்துடன் பணியாற்றுவதுடன் வருடாந்த இடமாற்றத்தின் போது தமது பிரச்சினைகளை இடமாற்ற சபை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *