தேசிய பூங்காக்களை பார்வையிட ஒன்லைன் ஊடாக நுழைவுச்சீட்டு

தேசிய பூங்காக்களை பார்வையிடுவதற்காக இன்று(10) முதல் ஒன்லைன்  ஊடாக நுழைவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி , வனஜீவராசிகள் பாதுகாப்புதிணைக்களத்தின்  உத்தியோகபூர்வ இணையத்தளம் மூலம் நுழைவுச்சீட்டுகளை  பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கவுடுல்ல தேசிய பூங்காவில் நேற்று (9) நீண்ட வரிசைகள் காரணமாக சுற்றுலாப் பயணிகள் அசௌகரிங்களுக்குள்ளானதையடுத்து  இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *