மட்டக்களப்பு – கொக்குவில், சவுக்கடி கடற்கரைப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர், ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த தங்க ஆபரண வர்த்தக நிலையம் ஒன்றில் கடமையாற்றி வந்த 34 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் ஏறாவூர் பகுதியிலுள்ள உறவினரது தங்க ஆபரண விற்பனை நிலையம் ஒன்றில் வேலை செய்துவருவதாகவும், சம்பவதினமான நேற்று மாலை வீட்டை விட்டு வெளியேறிய அவர் இரவாகியும் வீடு திரும்பாததால் அவரை உறவினர்கள் தேடிவந்துள்ளனர்.
இந்தநிலையில் குறித்த நபர் இன்று (11) சவுக்கடி கடற்கரை பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் குறித்த பகுதியில் இருந்து, உயிரிழந்தவர் செலுத்தியதாக கூறப்படும் மோட்டர் சைக்கிளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
இந்நிலையில் உயிரிழந்தவர் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.