மட்டு.தேற்றாத்தீவு திருவருள் ஸ்ரீ பாலமுருகன் ஆலய கும்பிசேகம்; தென்னிலங்கை கலைஞர்களுடன் சப்தஸ்வர இசைக்கொண்டாட்டம்

மட்டக்களப்பு தேற்றாத்தீவு திருவருள் ஸ்ரீ பாலமுருகன் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன நவகுண்ட பக்க்ஷ பஞ்சதள இராஜகோபுர மஹாகும்பாபிசேக  பெருஞ்சாந்தி குடமுழுக்கை சிறப்பிக்கும் வகையில் எதிர்வரும் 27 ஆம் திகதி மாலை 7 மணி முதல், கிழக்கிலங்கை புகழ் அனுவின் சப்தஸ்வரம் இசை கொண்டாட்டம் இடம்பெறவுள்ளது.

SQM foundation and SQM janitorial services inc.canada, SQM group of company – srilanka  ஆகிய நிறுவனங்களின்  உரிமையாளரும்  பிரபல தொழிலதிபருமான பாக்கியராஜா கமலநாதனின்  அனுசரணையில்  குறித்த இசைக்கொண்டாட்டம் இடம்பெறவுள்ளது.

இதேவேளை குறித்த இந்த இசை நிகழ்ச்சியில் சிறப்பம்சமாக, தென்னிந்திய பின்னணி பாடகி சரிகமப புகழ் பவதாயினி மற்றும் சரிகமப புகழ் சரத் மத்தியு ஆகியோருடன்  நாட்டில்  புகழ் பூத்த கலைஞர்கள்  பங்குகொள்கின்றனர்.குறித்த இசைநிகழ்ச்சியில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *