
அடுத்த வருடம் ஹஜ் கடமையை செய்ய எண்ணியுள்ளவர்கள் முஸ்லிம் சமய மற்றும் கலாசார திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள முகவர் நிறுவனங்களிடம் மாத்திரம் தங்கள் கடவுச்சீட்டுக்களை ஒப்படைக்கவேண்டும். இடைத்தரகர்களிடம் யாரும் சிக்கிக்கொள்ள வேண்டாம் என இலங்கை ஹஜ் முகவர் சங்கத்தின் தலைவர் பீ.எம்.கரீம் தெரிவித்தார்.

