
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் அதன் நிர்வாக உறுப்பினர்களை குறிவைத்து அப்துல் சத்தார் முஹம்மத் இஸ்மத் என்பவர் வெளியிட்டதாகக் கூறப்படும் அவதூறான, தீங்கிழைக்கும் யூடியூப் பதிவுகளை உடனடியாக நீக்குமாறும் அவரை ஆகஸ்ட் 21ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் கொழும்பு முதன்மை நீதிவான் தனுஜா லக்மாலி கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

