36 மணிநேரத்திற்கான வானிலை அறிவித்தல்; நாட்டின் பல பகுதிகளில் மழைக்கு வாய்பு்பு!

எதிர்வரும் 36 மணி நேரத்திற்கான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.  

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ளதாவது,                                             

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி,நுவரெலியா,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

வடமேல் மாகாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

நாட்டின் ஏனைய பகுதிகளில் மழையற்ற வானிலையை எதிர்பார்க்கலாம் .

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். 

எனவே பலத்து காற்று மற்றும் மழை உள்ளிட்டவற்றிலிருந்து பாதுகாக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *