மாகாண சபை தேர்தலை ஒருபோதும் பிற்போடமாட்டோம்; சாணக்கியனின் கேள்விக்கு அரசு பதில்

மாகாணசபை தேர்தல்கள் குறித்து, உரிய கால நிர்ணயத்தை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் நாடாளுமன்றத்தில்  இன்று வலியுறுத்தினார்.  

இந்தநிலையில் மாகாணசபை தேர்தலை பிற்போடும் நோக்கம் அரசாங்கத்திடம் இல்லை என்று, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எச்.எம்.எச் அபயரத்ன பதிலளித்துள்ளார். 

உரிய காலத்தில் இதற்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply