ஊழலுக்கு எதிரான நடவடிக்கையை மீண்டும் வலியுறுத்திய அநுர.!

ஊழல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் கடுமையான தண்டனையை எதிர்கொள்வார்கள் என  அநுரகுமார திஸாநாயக்க இன்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் நடந்த நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், புதிய சட்டத்தின் படி செப்டம்பர் மாதம் தொடக்கம், 

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசினால் வழங்கப்பட்ட அனைத்து அரச வீடுகளும் அரசாங்கத்தால் திரும்பப் பெறப்படும்.

பொறுப்புணர்வை வலுப்படுத்துவதற்கும் நீதியை உறுதி செய்வதற்கும் பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை இருக்கும்.

எந்தவொரு தனிநபரும் தனது நிர்வாகத்தின் கீழ் சட்டத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க மாட்டார்.

அனைத்து குடிமக்கள் மீதும் சட்டம் சமமாக அமல்படுத்தப்படும். சட்டம் அனைவருக்கும் சமம் என்று நாம் கூறுகின்றோம்.

ஆனால் அவர்கள் ஏன் இவ்வளவு கடுமையாக எதிர்க்கின்றார்கள்?ஏனென்றால் தாம் குற்றவாளிகள் என்று அவர்களின் மனசாட்சி சொல்கிறது.

ஆகவே எனது அரசாங்கத்தின் கீழ் எந்தவொரு தனிநபரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க மாட்டார்கள் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *