யாழ்ப்பாணத்தில் திருமண வயதை எட்டியும் பொருளாதார நிலைமை காரணமாக திருமணம் செய்ய முடியாத 108 ஜோடிகளுக்கு இன்றைய தினம் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரை வதிவிடமாக கொண்ட துரை தம்பதியினரின் , நிதியுதவியில் , 108 ஜோடிகளுக்கு இவ்வாறு திருமணம் செய்து வைக்கப்பட்டது.
தாலி , கூறை சேலை மற்றும் திருமணத்திற்கான இதர செலவுகளுக்கும் பணம் வழங்கப்பட்டு , 108 தம்பதிகளுக்கும் செல்வ சந்நிதி ஆலயத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 108 தம்பதியினரும் யாழ்ப்பாணத்தில் உள்ள 15 பிரதேச செயலகங்கள் ஊடாக தெரிவு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.









