எரிவாயு விலை திருத்தம் குறித்து வெளியான அறிவித்தல்!

 

2025ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்திற்கான லாப் எரிவாயுவின் விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்போவதில்லை என லாப் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஒகஸ்ட் மாதமும் லாப் எரிவாயு சிலிண்டரின் விலையில் எந்தவித திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை.

இறுதியாக கடந்த ஏப்ரல் மாதத்தில் தான் லாப் எரிவாயு சிலிண்டரின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது

இதேவேளை செப்டம்பர் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் எந்தவொரு திருத்தமும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ எரிவாயு நிறுவனம் விலை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *