'க்ளீன் ஸ்ரீலங்கா' கிளிநொச்சியில் செயிரி வாரம் ஆரம்பம்

‘க்ளீன் ஸ்ரீலங்கா’ தேசிய வேலைத்திட்டத்துடன் இணைந்து செயிரி வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

‘க்ளீன் ஸ்ரீலங்கா’ தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக அரசாங்க நிறுவனங்களில் ஒழுங்கமைப்பை பேணுவதற்காக ‘செயிரி வாரம்’ இன்று (01.09.2025) ஆரம்பிக்கப்பட்டது.

பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்ட சுற்றுநிருபத்தின்படி, 

2025.09.01 முதல் 2025.09.04 வரை ஒவ்வொரு நாளும் காலை இரண்டு மணித்தியாலங்கள் கட்டிடங்களின் உள்ளக மற்றும் புற சூழலை சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் உட்பிரிவுகள் முதல் நாளான இன்று (01) சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *