வவுனியா பட்டானிச்சூரில் விபத்து; மூவர் படுகாயம்

வவுனியா பட்டானிச்சூரில் இன்று இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயம் அடைந்துள்ளனர். 

வவுனியா பட்டானிச்சூரில் இன்று இடம்பெற்ற விபத்தில் இரு பெண்கள் உட்பட மூவர் படுகாயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் இருந்து இரு மோட்டார் சைக்கிள்கள் பயணித்துள்ளன.

அதே நேரத்தில், பட்டா ரக வாகனமும் பயணித்துள்ளது.

வவுனியா பட்டானிச்சூரில் வைத்து பட்டா ரக வாகனத்துடன், மோட்டார் சைக்கிள்கள் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணைகள் வவுனியா பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Leave a Reply