
இலங்கையின் 2026-ஆம் ஆண்டுக்கான கல்வி சீர்திருத்தக் கொள்கையை வடிவமைக்கும் கல்வி தொடர்பான கொள்கை வகுக்கும் அமைப்புகளில் முஸ்லிம் சமூகத்திற்கு நியாயமான பிரதிநிதித்துவம் இல்லாதது குறித்து எமது ஆழ்ந்த கவலையை தெரிவிக்க விரும்புகிறோம்.இது நியாயம், சமத்துவம் மற்றும் தேசிய ஒற்றுமை ஆகியவற்றின் ஆணிவேரைப் பாதிக்கும் விடயமாகும் என தேசிய சூரா சபை பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது.

