
இன்று நாங்கள் எமது நாட்டின் பெருமைக்குரிய ஒரு மகனை நினைவு கூருகிறோம். எம் மண்ணின் மைந்தனை நாம் நினைவு கூருவது இவர் எமது பாராளுமன்றின் முன்னாள் சபாநாயகர் என்பதற்காக மட்டுமல்ல, தேசமான்ய விருது பெற்ற ஒரு சாதனையாளர் என்பதற்காக மட்டுமல்ல, ஒரு கெபினட் அமைச்சராக, ஆளுநராக எமது தாய் நாட்டுக்கு சேவை செய்தார் என்பதற்காக மட்டுமல்ல, இவர் வாழ்ந்த வாழ்க்கை, இவர் பயணம் செய்த பாதை, செய்த நற்பணிகள், விட்டுச் சென்ற மரபுகள் இவையனைத்தும் அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் இன்றைய தலைமுறையினருக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் ஒளி விளக்காக ஒரு தீபத்தை விட்டுச்சென்றிருக்கின்ற மனிதாபிமானம் கொண்ட ஒரு சிறந்த மனிதர் என்ற காரணத்திற்காகவே ஆகும்.

