
ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலம் 150 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டமூலத்திற்கு எதிராக சாமர சம்பத் தசநாயக்க மாத்திரம் வாக்களித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலம் மீதான விவாதம் காலை 11 மணிமுதல் மாலை 3.30 மணிவரை இடம்பெற்றது. இதனையடுத்து சட்டமூலத்தை நிறைவேற்ற சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க வாக்கெடுப்பைக்கோரினார்.

