வீதி விபத்தில் பலியான சிறுத்தை குட்டி!

மஹா ஓயா-அரலகங்வில வீதியில்  நடந்த  விபத்தில் ஒரு சிறுத்தை குட்டி உயிரிழந்ததாக இலங்கை லியோபோகன் தெரிவித்துள்ளது.

இலாப நோக்கற்ற சிறுத்தை பாதுகாப்பு அமைப்பின் கூற்றுப்படி, 5–6 மாத சிறுத்தை குட்டியே உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. 

குறித்த வீதியில் சிறுத்தைக் குட்டி சென்று கொண்டிருந்த போது வாகனம் மோதியதில்  உயிரிழந்தது.

“சிறுத்தைகள் இதற்கு முன்பு இங்கு கடப்பதை அவதானிக்க முடிந்தது. வனவிலங்கு மண்டலங்களில் எச்சரிக்கையாக வாகனம் ஓட்டுங்கள். ஒவ்வொரு உயிரும் முக்கியமானது,” என்று இலங்கை லியோபோகன் ‘எக்ஸ்’ இல் ஒரு பதிவில் தெரிவித்துள்ளது.

Leave a Reply