
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா சபை (NSC) கடந்த ஞாயிற்றுக்கிழமை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், பலஸ்தீனத்திற்கு ஐ.நா.வில் முழு உறுப்புரிமை வழங்குவதற்கு உதவுமாறும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் (ICC) பிறப்பிக்கப்பட்ட சர்வதேச பிடியாணையின்படி சரணடையும் வரை ஐ.நா.வில் இருந்து இஸ்ரேலை இடைநிறுத்துமாறும் வலியுறுத்தியுள்ளது.




