இலங்கையின் உள்நாட்டு பொறிமுறையை நிராகரித்து தமிழின அழிப்பு, வலிந்து காணமால் ஆக்கப்பட்டமை, போர்க்குற்றங்கள் மற்றும் மனித புதை குழிகள் குறித்து சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது.
வலிந்து காணமால் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினால் இந்த உண்ணாவிரத போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு சுழற்சி முறையில் நடைபெற்று வருகிறது.
இவ் உண்ணாவிரத போராட்டத்தில் மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், பொது மக்கள், இளைஞர்கள், மக்கள் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இவ் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டமானது எதிர் வரும் முதலாம் திகதி வரை மாவட்ட ரீதியில் தொடர்ந்து இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

