திடீரென வீசிய மினி சூறாவளி பேருந்தின் மீது முறிந்து விழுந்து ஆலமரம்!

கொழும்பில் பேருந்து ஒன்றின் மீது ஆலமரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது. திடீரென நேற்று இரவு வீசிய மினி சூறாவளி காரணமாக மரம் முறிந்து விழுந்துள்ளது. 

கொழும்பு மருதாணி தொழில்நுட்பக் கல்லூரி சந்தியில் தனியார் பேருந்து ஒன்று தரித்து நின்றது. நேற்று இரவு திடீரென பலத்த காற்றுடன் சிறிதளவு மழை பெய்தது. 

திடீரென வீசிய காற்றால் கொழும்பின் சில பகுதிகளில் மினி சூறாவளி ஏற்பட்டது. அதன்போதே ஆலமரம் ஒன்று முறிந்து பேருந்து மீது விழுந்துள்ளது. 

நேற்று பலத்த காற்று வீசும் என்று வானியை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததால் மக்கள் விழிப்புடன் காணப்பட்டனர். 

இந்த மினி சூறாவளியால் பெரிதளவில் சேதம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply