சம்பூர் கடலில் கவிழ்ந்த படகு; மீனவர் மாயம் – தேடுதல் பணி தீவிரம்!

சம்பூர் – சூடைக்குடா கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக மூதூர் பொலிசார் தெரிவித்துள்ளனர். 

இச்சம்பவத்தில் யுனைதீன் அனஸ் (வயது – 40) என்ற மீனவரே காணாமல் போயுள்ளதாகவும் முகமது ஜாபீர் முகமது பைசர் (வயது 28) என்பவரே உயிர் தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மூதூர் பகுதியைச் சேர்ந்த குறித்த இரு மீனவர்களும் நேற்று  ஞாயிற்றுக்கிழமை (28) இரவு சூடைக்குடா கடற்பகுதிக்குச் சென்று மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். 

மறுநாள் திங்கட்கிழமை (29) அதிகாலை 2.00 மணியளவில் குறித்த படகு காற்றின் காரணமாக கவிழ்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதன்போது ஒருவர் மண்ணெண்ணை  கானைப் பிடித்துக் கொண்டு நீந்தி அதிகாலை 5.00 மணியளவில் ஒரு மீனவர் கரையை வந்தடைந்துள்ளார். 

கரையை வந்தடைந்த மீனவர் மற்ற மீனவரைக் காணவில்லை என்று பொலிஸாருக்கு சம்பவம் தொடர்பில் தகவல் வழங்கினார். 

தகவலையடுத்து பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது குறித்த படகு மீட்கப்பட்டது. 

எனினும் மீனவர் கண்டுபிடிக்கப்படாததால் குறித்த  மீனவரை தேடும் பணிகள் தொடர்ந்து இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *