
வஸீம் தாஜுதீன் படுகொலை. நியாயம் நிலை நிறுத்தப்படாத, இதுவரை குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படாத, தீர்க்கப்படாத குற்றங்களின் பட்டியலில் இருக்கும் மிக முக்கியமான ஒரு சம்பவம். இதுவரை இந்த படுகொலை தொடர்பில் ராஜபக்ஷ குடும்பம் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு வரும் நிலையில், இப்போது மீண்டும் இக்கொலையுடன் ராஜபக்ஷ குடும்பத்துக்கு தொடர்புகள் இருந்தன என்பதை வலுப்படுத்தும் விதமான மற்றொரு விடயமும் விசாரணைகளில் வெளிப்பட்டுள்ளது.

