அரசுக்கு எதிராக மக்களின் வாக்குகள் இருப்பதைக் காட்ட மாகாண சபைத் தேர்தல் அவசியம்! மஹிந்த சுட்டிக்காட்டு

அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் வாக்குகள் இருப்பதைக் காட்டுவதற்காக மட்டுமே மாகாண சபைத் தேர்தல்களுக்கான தற்போதைய தேவை வெளிப்படுத்தப்படுகிறது என தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாக கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தல்கள் அவசியம் என்று எந்த பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றத்திலோ அல்லது வேறு இடத்திலோ எந்த கேள்வியையும் எழுப்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். 

மாகாண சபைத் தேர்தல்கள் ஏன் தேவை என்பதை மக்களுக்குப் புரிய வைக்காமல், மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது அவசியம் என்ற கருத்தை வெல்ல முடியாது என்று மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *