தங்காலை பொலிஸில் ஆஜராகவில்லை – புதிய திகதியைக் கோரிய விமல் வீரவன்ச!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, இன்று (06) தங்காலை பொலிஸில் ஆஜராக போவதில்லையென்றும், அதற்காக தங்காலை பொலிஸாரிடம் வேறு திகதியைக் கோரியதாக தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று (06) தங்காலை பொலிஸாரிடம் ஆஜராக வேண்டும் என்று தங்காலை தலைமை பொலிஸ் கண்காணிப்பாளர் நேற்று (05) தெரிவித்திருந்தார். 

சில நாட்களுக்கு முன்பு அளித்த வாக்குமூலம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிடம் வாக்குமூலம் பெற பொலிஸார் அழைப்பாணை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *