விஜேராம வீட்டால் மகிந்த செலுத்தப்போகும் இலட்சக்கணக்கான பணம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வசித்து வந்த கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள, உத்தியோகபூர்வ இல்லத்தின் மின்சாரம் மற்றும் நீர் கட்டண நிலுவை தொகை காரணமாக அவற்றினை துண்டிக்க அதிகாரிகள் சென்றதாக தெரியவந்துள்ளது.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அதிகாரிகள் நீர் இணைப்பை துண்டிக்க அங்கு சென்றிருந்ததாகவும் ஒரு இலட்சம் ரூபாய் நிலுவைத் தொகை காரணமாக மின்சார வாரியமும் மின்சார இணைப்பை துண்டிக்க அங்கு சென்றிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பணியாளர்கள் மட்டுமே அங்கு இருந்ததால், மின்சாரம் மற்றும் நீர் இணைப்பை துண்டிக்காமல் அதிகாரிகள் திரும்பி வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இது குறித்து விசாரித்த போது, அந்த வீட்டிற்கு 6 இலட்சம் ரூபாய் நிலுவைத் தொகை இருப்பதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *