கொழும்பு – பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயை அணைக்க மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ள நிலையில், தீ தற்போது முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தீயணைப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.