
காஸாவில் இரண்டு ஆண்டுகளின் பின்னர் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பலஸ்தீன வெளியுறவு அமைச்சு புள்ளிவிபர அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், காஸா பகுதியில் இரண்டு ஆண்டுகளாக ‘இனப்படுகொலை’ நடப்பதாகவும், ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேம் உட்பட மேற்கு கரை முழுவதும் ‘இனவெறி’ (Apartheid) மற்றும் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பு நடப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

