
நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் திருகோணமலை துறைமுக அதிகாரசபை காணிப் பிரச்சினை கடந்த வாரம் மீண்டும் பாராளுமன்றத்தின் கவனத்திற்கு வந்தது. 1984 ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தலின் மூலம் துறைமுக அதிகாரசபைக்கு ஒப்படைக்கப்பட்ட 2,500 ஹெக்டயர் காணிகளில், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பல தசாப்தங்களாக வாழ்ந்து வருகின்றன.

