வடமாகாண நன்னடத்தைப் பாதுகாவல் மற்றும் சிறுவர் கவனிப்பு சேவைகள் திணைக்களம் ஏற்பாடு செய்த உலக குழந்தைகள் தினம் இன்றைய தினம் பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெற்றது
நன்னடத்தை பாதுகாவல் மற்றும் சிறுவர் கவனிப்பு சேவைகள் திணைக்களம் ஆணையாளர் சுஜீவா சிவதாஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சறோஜா சாவித்திரி போல்ராஜ் ,வடமாகாண ஆளுநர்
நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோர், சிறப்பு விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அத்துடன் ஊவா மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்கள ஆணையாளர் E.K.V.Tஎதிரி சூரிய, சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள், சிறுவர் இல்லங்களின் பொறுப்பதிகாரிகள்,சிறுவர் இல்லங்களின் சிறார்கள் வடமாகாண சிறார்கள் கலந்து கொண்டிருந்தனர்.

