வவுனியா மாவட்டத்தில் உயர்தர பரீட்சையில் அதி விசேட சித்திகளைப் பெற்றவர்கள் மற்றும் சாதாரண தர பரீட்சையில் அதி விசேட சித்திகளை பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று வவுனியா மாநகர சபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன் போது 165 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டிருந்ததோடு கடந்த முறை மருத்துவ பீடம், பொறியியல் பீடம் உட்பட முதல் நிலையில் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களும் இதன் போது கௌரவிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுர்தீன், முத்து முகமது, ப.சத்தியலிங்கம் உட்பட உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், பிரதித் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

