நாவலப்பிட்டி, தொலஸ்பாக வீதியில் பாரிய மண்சரிவு- 10 மாயம்!

நாவலப்பிட்டி, தொலஸ்பாக வீதியில் உள்ள கிரேக்ஹெட் (Crighead) தோட்டத்தின் பரகல பிரிவில் பாரிய மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த அனர்த்தத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருக்கலாம் எனவும், உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

வீடுகளை இழந்த மக்கள் கிரேக்ஹெட் தமிழ்ப் பாடசாலை மற்றும் அருகிலுள்ள கோவில்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

காவல்துறை அல்லது ஊடகங்கள் உட்பட எந்தவொரு உதவியும் தற்போது வரை அப்பகுதிக்குச் செல்லவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *