மின் துண்டிப்பு இல்லை! பாவனையாளர்களுக்கு இலங்கை மின்சார சபையின் நிவாரணம்!

சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படாது என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் ஷெர்லி குமார தெரிவித்துள்ளார்.

மின் கட்டணம் செலுத்தப்படாமைக்காக இந்த மாதத்தில் எந்தவொரு துண்டிப்பும் மின்சார சபையினால் மேற்கொள்ளப்படமாட்டாது என்றும் அறிவித்துள்ளார்.

எதிர்வரும் மாதங்களில் மின் கட்டணம் சேர்க்கப்படும் என்றும், இந்த நேரத்தில் மின் துண்டிப்பு முன்னெடுக்கப்படாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், பல பாதிக்கப்பட்ட பகுதிகளில் மானி வாசிப்புகள் மற்றும் மின் கட்டணப் பட்டியல்கள் விநியோகிப்பது சாத்தியமில்லை என்றும், அந்த கட்டணப்பட்டியல்கள் அடுத்த மாதங்களில் பாவனையாளர்களுக்குக் கிடைக்கச் செய்யப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மோசமான வானிலையால் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலை காரணமாக இலங்கை மின்சார சபையும் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளதாகவும், அது கணக்கிடப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *