நிவாரணம் கொடுக்க வந்த இளைஞர்களுடன் சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முரண்பட்ட சம்பவம் கண்டியில் இடம்பெற்றுள்ளது.
பேரனர்த்த்தால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு பல தரப்பினரும் சென்று தற்போது உதவிகளை வழங்கி வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் அரசியல்வாதிகள் தமது எதிர்கால அரசியல் நலன்களை அடிப்படையாக கொண்டு செயற்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இதன் காரணமாக பேரிடரினால் பாதிக்கப்பட்ட மக்கள் உதவிகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில், பசியுடன் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
பல பகுதிகளில் அரசியல்வாதிகளுக்கும் உதவி செய்ய சென்ற குழுவினருக்கும் இடையில் மோதல் நிலைமை ஏற்பட்டு, கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸ் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சில பகுதிகளுக்கு அனுதாபம் தேடும் வகையில், வீடியோ குழுவினருடன் சென்ற பல அரசியல்வாதிகள் மக்களால் விரட்டி அடிக்கப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
<a href="http://” target=”_blank”>



