பாராளுமன்றை வந்தடைந்த ஜனாதிபதி அநுர!

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்னும் சிறிது நேரத்தில் நடைபெறவுள்ள நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க  சற்றுமுன்னர் பாராளுமன்றை வந்தடைந்துள்ளார்.

பாராளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாராளுமன்றில் விசேட உரை ஒன்றை ஆற்றி வருகிறார்.

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (05) இறுதி நாளாக நடைபெற்றது.

இதன்போது, நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை குறித்து ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருத்துக்களை வெளியிட்டனர். 

 

இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பதைத் தவிர்க்கத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *