இடரால் உயர்நீத்த உறவுகளுக்கான ஆத்ம சாந்தி பூஜை – மத தலைவர்களும் பங்கேற்பு

வவுனியா குட்செட் வீதி கருமாரி அம்மன் தேவாலயத்தில் இலங்கையில் ஏற்பட்ட பேரிடரால் உயிர் நீத்த அனைத்து உறவுகளுக்குமான ஆத்ம சாந்தி பூஜை மற்றும் அன்னதான நிகழ்வும் இன்று ஆலயத்தில் இடம்பெற்றிருந்தது

இந்நிகழ்வில் நான்கு மத தலைவர்களுடன், மாவட்ட உதவி அரச அதிபர் ஆகியோருடன் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு அஞ்சலியை செலுத்தியிருந்தனர்

இதேவேளை பேரிடர் ஏற்பட்ட மறுதினம் முதல் இன்றைய தினம் வரை குறித்த ஆலயத்தில் மூன்று நேரமும் இடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சமைத்த உணவு வழங்கும் நிகழ்வும் இடம்பெற்று வருகிறதுடன் உலர் உணவு பொதிகளும் வழங்கி வருகின்றனர்

வவுனியா குட்செட் வீதி கருமாரி அம்மன் ஆலய பரிபாலன சபையினர், குட்செட் வீதி இளைஞரணியினர், வைரவர்புளியங்குளம் இராவணன் சனசமூக நிலையத்தினர், குட்செட் வீதி கிராம அபிவிருத்தி சங்கத்தினர் இணைந்து நண்கொடையாளர்களின் உதவியுடன் இச் செயல்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *