வட்டுக்கோட்டையில் வாளுடன் ஒருவர் கைது நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலி கோவில் பகுதியில் வாளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் நேற்றையதினம் வாளுடன், வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை பொலிஸார் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தினர்.

இதன்போது அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

Leave a Reply