வடக்கு மாகாண அரச சேவை பட்டதாரிகள் சங்கத்தின், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ் மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், பதவி உயர்வை வழங்கு, சம்பள அளவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்து, ஓய்வூதிய காப்புரிமையை வழங்கு போன்ற பல்வேறு வாசங்களை தமிழ் சிங்கள மொழிகளில் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.






