உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை

கொழும்பு, மார்ச் 14

உள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலை முதல் தடவையாக 150,000 ரூபாவைத் தாண்டியுள்ளதாக  தங்க வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்றைய தினம் 24 கெரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 150,000 ரூபாவாக இருந்த அதேவேளை 22 கெரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை 139,000 ரூபாவாகும்.

ரஷ்யா – யுக்ரைன் யுத்தம் காரணமாக தங்கத்தின் விலை இவ்வாறு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சந்தையில் தங்கத்தின் அளவு வேகமாக குறைந்து வருவதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், உலக சந்தையில் தங்கத்தின் விலை 1980.21 அமெரிக்க டொலர்களாக அதிகரித்ததுடன், அது மீண்டும் 1974.71. அமெரிக்க டொலர்களாகக் குறைவடைந்தது.

Leave a Reply