
”நாங்கள் கோட்டாவுடன்” என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல டுவிட் செய்துள்ளார்.
மேலும் அவரது பதிவில்,
இந்த உலகம் கண்டிராத மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியை நாம் சந்தித்து வருகின்றோம்.
அதன் விளைவுகளை இப்போது இலங்கை உணர்கின்றது. நாம் ஒன்றுபட வேண்டும். ஒன்றாக இணைந்து யுத்தத்தை முடித்தோம்.
நாங்கள் ஒன்றாக இணைந்து தடுப்பூசி செலுத்தி, கொவிட் – 19க்கு எதிராக போராடினோம்.
இப்போது நாம் ஒன்றாக இணைந்து இந்த பொருளாதார நெருக்கடியை எதிர்த்து போராடுகின்றோம்.




