அமெரிக்காவின் நகர்வு – ஈரானின் அறிவிப்பு – போர் பதற்றம் மேலும் அதிகரிப்பு

அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கான சமிக்ஞைகளை வெளிப்படுத்திவிட்டு, இரகசியமாக தரைவழி தாக்குதலுக்குச் சதி செய்து வருவதாக ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர் கலிபாப் தெரிவித்துள்ளார். ஈரான் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனம் இன்று (29) இந்த தகவலை வௌியிட்டுள்ளது. அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, அமெரிக்கா பகிரங்கமாக பேச்சுவார்த்தைக்கான சமிக்ஞைகளை வெளிப்படுத்துகிறது. ஆனால் இரகசியமாக தரைவழித் தாக்குதலுக்குச் சதி செய்வதை அறியமுடிந்துள்ளது. அமெரிக்கா 15 அம்ச ஒப்பந்தம் ஒன்றை கொண்டு தமது விருப்பங்களை முன்வைப்பதன் மூலம், போரில் அடையத்தவறியதை நிலைநாட்ட முயல்கிறது. […]

Leave a Reply