மானை வேட்டையாடி இறைச்சியாக்கிய இருவர் கைது

குருநாகல் கல்கமுவ களப் பாதுகாப்பு அலுவலக அதிகாரிகளால் புள்ளி மானை வேட்டையாடி உரித்து இறைச்சியாக்கிய இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

சோதனையின்போது வேட்டையாடிய மானின் இறைச்சி, உடல் உறுப்புகள் மற்றும் வேட்டைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் என்பன சான்றுப் பொருட்களாக கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்ட சான்றுப் பொருட்களும் ஏப்ரல் 2ஆம் திகதி கல்கமுவ நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply