முல்லைத்தீவு மாவட்டத்தில் க.பொ.த.உயர்தரப்பரீட்சையில் சாதித்த மாணவர்களை நேரில் சென்று மதிப்பளித் ரவிகரன் எம்.பி!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையில் சாதித்த மாணவர்களை வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரில் சென்று தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மதிப்பளித்துள்ளார்.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உயர்தரப் பரீட்சையில் தோற்றி, ஒவ்வொரு பிரிவுகளிலும் மாவட்டத்தில் முதல் ஐந்து நிலைகளைப்பெற்ற மாணவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் நேரில் சென்று வாழ்துவதுடன், மதிப்பளிக்கும் செயற்பாட்டையும் மேற்கொண்டுவருகின்றார்.

அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கலைப்பிரிவில் – 3Aசித்திகளைப் பெற்று மாவட்டத்தில் முதல் நிலை பெற்ற புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவியான இராஜேயஸ்வரன் யூலியானா, உயிரியல் விஞ்ஞானப்பிரிவில் 3A சித்திகளைப்பெற்று மாவட்டத்தில் முதல்நிலை பெற்ற முல்லைத்தீவு மகாவித்தியாலய மாணவியான மிராஜ் நிடா பாத்திமா, வணிகப்பிரிவில் 3Aசித்திகளைப்பெற்று மாவட்டத்தில் முதல் நிலை பெற்ற முல்லைத்தீவு மகாவித்தியாலய மாணவியான அன்ரனிற்றா நிலூஜினி அருள்ஜெனிபேட், உயிரியல் தொழில்நுட்பப் பிரிவில் 2A,Cசித்திகளைப் பெற்று மாவட்டத்தில் முதல் நிலை பெற்ற முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி மாணவனான செந்தில்வேல் சிந்துசன், உயிரியல் விஞ்ஞானப்பிரிவில் 3A சித்திகளைப்பெற்று மாவட்டத்தில் இரண்டாம்நிலை பெற்ற குமுழமுனை மகாவித்தியாலய மாணவியான பகீரதன் லாசன்ஜா, வணிகப்பிரிவில் 3A சித்திகளைப்பெற்று மாவட்டத்தில் மூன்றாம்நிலை பெற்ற முல்லைத்தீவு மகாவித்தியாலய மாணவியான ஜனோதினி தவபாலசிங்கம், வணிகப்பிரிவில் 3A சித்திகளைப்பெற்று மாவட்டத்தில் நான்காம்நிலை பெற்ற முல்லைத்தீவு மகாவித்தியாலய மாணவியான பானுசா தர்மராசா, உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் 3A சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் நான்காம் நிலை பெற்ற முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி மாணவனான சுதாபரன் எழில்வண்ணன், உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் 3A சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் ஐந்தாம்நிலை பெற்ற முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி மாணவனான கந்தசாமி சஜீபன் ஆகிய மாணவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் முதற்கட்டமாக நேரில் சென்று வாழ்த்தியதுடன், அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மதிப்பளித்தார்.

மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் உயர்தரப்பரீட்சையில் தோற்றி ஒவ்வொரு துறைசார் பிரிவுகளில் முதல் ஐந்து நிலைகளைப் பெற்ற ஏனைய மாணவர்களையும், தொடர்ந்து அடுத்தடுத்த கட்டங்களினூடாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மதிப்பளிக்கத் திட்டமிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply