சிவனடி பாத மலைக்கு செல்லும் யாத்ரீகர்கள் அதிகளவில் பிளாஸ்டிக் குப்பைகளை விட்டு வெளியேறி உள்ளனர்.
இதன் காரணமாக சிவனடி பாத மலை பகுதியில் பாரிய அளவில் பிளாஸ்டிக் போத்தல்கள் பொலித்தீன் போன்ற பொருட்கள் சாலை ஓரங்களிலும் வனப் பகுதிகளில் ஆங்காங்கே குவிந்து வருகிறது.
2025/2026 பருவகாலம் ஆரம்பித்து சுமார் ஐந்து மாதங்கள் கடந்து விட்டாலும் இம் முறை நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக அதிக அளவில் யாத்திரிகர்கள் வருகை தராத போதிலும் வருகை தந்த யாத்திரிகர்கள் நல்லதண்ணி நகரில் இருந்து மலை உச்சி வரை உள்ள சாலையின் இருபுறமும் அங்கு உள்ள வனப் பகுதிகளில் அதிக அளவில் உக்கும் உக்கா பொருட்கள் விட்டு சென்று உள்ளனர்.
சிவனடி பாத மலைக்கு செல்லும் யாத்ரீகர்கள் நமக்கு பின்னர் நமது பிள்ளைகளுக்கு விட்டு செல்ல வேண்டும் என நினைப்பது இல்லை.
நமது மூதாதையர்கள் நமக்கு விட்டுச் சென்ற இவ்வாறான புனித இடங்களை பாதுகாத்து நமக்கு பின்னர் வரும் சமுதாயத்திற்கு விட்டு செல்ல வேண்டும்.
ஆகையால் இனி வரும் காலங்களில் சிவனடி பாத மலைக்கு செல்லும் யாத்ரீகர்கள் மலைக்கு செல்லும் பிரதான சாலையில் பிளாஸ்டிக் போத்தல்கள் பொலித்தீன் போன்றவற்றை எடுத்து செல்ல வேண்டாம் என உபதேசம் செய்ய வேண்டும்.





