திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை ஜாமியா நகரில் பஜாஜ் டிஸ்கவர்(Bajaj Discover 135 )(EP – UU 9667) என்ற இலக்கத்தையுடைய சட்டத்தரணி ஒருவரின் மோட்டார் சைக்கிள் நேற்று (08) இரவு களவாடப்பட்டுள்ளதாக தம்பலகாமம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வீட்டு முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளே இவ்வாறு களவாடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதற்கு முன்னரும் ஓரிரு வாரங்களுக்குள் முள்ளிப்பொத்தானை பகுதியில் பல திருட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து யாருக்காவது ஏதேனும் தகவல் தெரிந்தால், தயவு செய்து உடனடியாக அறியத் தருமாறும் உரிமையாளரால் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்





