
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் Changyong Rhee இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளார்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் மதிப்பீடு தொடர்பில் ஜனாதிபதிக்கு விளக்கமளிப்பதே இதன் பிரதான நோக்கமாகும்.
பணிப்பாளர் நேற்று பிற்பகல் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோரை சந்தித்துள்ளார்.




