பசில் தயவு செய்து அரசாங்கத்திலிருந்து விலகியிருங்கள் – முருத்தெட்டுவே ஆனந்த தேரர் !

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அரசாங்கத்திலிருந்து ஆறு மாதங்கள் விலகியிருக்கவேண்டும் என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பசில் ராஜபக்ச நிதியமைச்சராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் இருந்த விடயங்கள் கூட தற்போது இல்லாமல் போயுள்ளதாக மக்கள் கூறுகின்றதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்கு உதவியவர்களை மக்கள் சபிக்கும் நிலையில் மக்கள் உள்ளதாகவும் தேரர் தெரிவித்துள்ளார்.

எனவே பசில் நீங்கள் தயவு செய்து ஆறு மாதங்கள் அரசாங்கத்திலிருந்து விலகியிருங்கள் என தெரிவித்த தேரர், நீங்களே மிகப்பெரிய தீயசக்தி என மக்கள் தெரிவிக்கின்றதாகவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *