கிளிநொச்சியில் பாரிய கசிப்பு உற்பத்தி பொலிசாரால் முற்றுகை!

பாரிய கசிப்பு உற்பத்தி பொலிசாரால் முற்றுகையிடப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை  பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.

தருமபுரம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து இன்று (செவ்வாய்க்கிழமை) குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, 15 பெரல் கோடா, 65 லீட்டர் கசிப்பு மீட்கப்பட்டதுடன் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸ் விசாரணைகளின் பின்னர்  பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தருமபுரம்  பொலிஸ்  நிலைய பொறுப்பதிகாரி  D.M சதுரங்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *