
‘அப்பே விருவா’ பாடல் கேவலமான, பரிதாபத்துக்குரிய பாடல் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்தக் கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
தற்போது பசில் ராஜபக்ஷ ஜனாதிபதியின் கைப்பாவையாக செயற்படுகின்றார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
விமல் வீரவன்ச, உதய கம்மன்பிலவை பதவி நீக்கம் செய்ய அரசாங்கம் ஒரு வருடத்துக்கு முன்பே திட்டமிட்டிருந்ததாகவும் மேலும் அவர் கூறியுள்ளார்.